சென்னை மெரினாவில் சுதந்திர தின அணிவகுப்பு! அனுமதி உண்டா? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜாஜி சாலையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, தமிழ்நாடு மாநில அரசு சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 

இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திர தினவிழாவில் மக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வெளியான தகவலின்படி, சென்னை ராஜாஜி சாலையில் நடக்க இருக்கும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்த உள்ளதாகவும் தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independence Day Parade at Chennai Marina 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->