சென்னை அருகே இரயிலை கவிழ்க்க சதி?! போல்டை கழற்றி அரங்கேற இருந்த பெரும் விபத்து தடுத்து நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலையம் அருகே சிக்னல் ஸ்ப்ரிங் கருவியில் போல்ட் கழட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ரயிலை கவிழ்க்க சதியா? இல்லை ஊழியர்களின் கவனக்குறைவு பிரச்சனையா? என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி கும்முடிபூண்டி புலிக்குளம் அருகே தண்டவாளத்தில் 95 கிளிப்புகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அதே போல ரயிலை கவிழ்க்க இன்று சிக்னல் ஸ்ப்ரிங் கருவியில் போல்ட் கழட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாள கிளிப்புகள் உடனடியாக கழட்டப்பட்டது, இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதேபோல மற்றும் ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிக்னல் ஸ்ப்ரிங் கருவியில் போல்ட் கழட்டப்பட்டுள்ளதால் பெரும் ரயில் ரயில் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றும், தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கும்முடிபூண்டி புலிக்குளம் தண்டவாள கிளிப்புகள் அகற்றும் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ஏற்கனவே விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Railway Ponnery Incident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->