6 ஆயிரம் சிறை கைதிகள் தப்பி ஓட்டம்; கிழக்கு ஆபிரிக்க நாட்டில் பதற்றம்..! - Seithipunal
Seithipunal


காங்கோ  முன்செஸ்க் சிறையில் இருந்து 06 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியுள்ளார். இதன் அங்கு பதற்றம் நிலவுகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. 

 அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வரும் நிலையில், கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.

இந்நிலையில், முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றுள்ளது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓடியுள்ளார்.  இதில் சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக  அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 thousand prisoners escape


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->