தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழக அரசு அதிரடி!
IPS Offi Trans TN Govt
தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,
* நெல்லை டிஐஜியாக இருந்த டாக்டர். பா. மூர்த்தி, ஐபிஎஸ் – ராமநாதபுரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
* ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், ஐபிஎஸ் – மதுரை மண்டல டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு -1 துணை ஆணையராக – ஆர். சக்திவேல், ஐபிஎஸ் (முந்தைய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்) நியமனம்.
* சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் – சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக – டாக்டர். வி. பாஸ்கரன், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* நெல்லை சரக டிஐஜியாக சந்தோஷி ஹதிமானி, ஐபிஎஸ் பொறுப்பேற்கிறார்.
* ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ. சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.
* சிபிசிஐடி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக ஜி. ஜவகர், ஐபிஎஸ் பதவி மாற்றம்.
* சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக வி. கார்த்திக், கிழக்கு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக எஸ். மேகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.