ஜெய்பீம் பட நிஜ ராஜாக்கண்ணுவின் உறவினர் 'லுங்கி' அணிந்து வந்ததால், கமிஷனர் அலுவகத்தில் அனுமதி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லுங்கி அணிந்து கொண்டு மனு கொடுக்க வந்த நபரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் காட்டப்பட்ட ராஜாக்கண்ணுவின் கதாபாத்திரம் நிஜமாக வாழ்ந்து போலீசாரின் அராஜகத்தில் இறந்து போனவர். 

இந்த நிலையில், ஜெய்பீம் பட நிஜ ராஜா கண்ணுவின் உறவினரான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்பொழுது அவர் லுங்கி அணிந்து இருந்த காரணத்தால் போலீசார் அவரை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்க மறுத்தனர். 

இதனைத் தொடர்ந்து வெளியே சென்ற கொளஞ்சியப்பன் கடையில் வேஷ்டி வாங்கி அணிந்து கொண்டு, அவர் அணிந்து இருந்த லுங்கியை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு மனு கொடுக்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்து அனுமதிக்க மறுத்த போலீசாரிடம் விசாரித்தபோது மேலதிகாரிகள் லுங்கி அணிந்து வந்தால் உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்துள்ளனர். உண்மையாகவே அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்று தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jai Bhim Rajakkannu Relative dress code Not allowed To commissioner office


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->