#சற்றுமுன் || கள்ளக்குறிச்சி கலவர விவகாரம் : சிக்கிய 108 பேருக்கு நீதிபதி அளித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மாணவி மரணம் குறித்து கடந்த நான்கு நாட்களாக போராட்டம் செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்றைய தினம் மாணவர்கள் அமைப்பு மற்றும் சிலரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறைம், கலவரமாக வெடித்தது.

மேலும் அந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போலீசாரின் வாகனம் ஒன்றும் கொளுத்தப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 108 பேரை, நான்கு வாகனங்களில் போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கைதானவர்களை   

பின்னர் நீதிபதி அவர்கள், 108 போரையும் வரும் ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறி நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi issue 108 people arrest


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->