காஞ்சிபுரத்தில் கிறிஸ்துவ பாதிரியார் கைது! தேவாலயத்தில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

காஞ்சிபுரம் ரயில்வே சாலை பகுதியில் சி.எஸ்.ஐ தேவாலயம் கிறிஸ்துவ ஒன்று இயங்கி வருகிறது. இந்த தேவாலயத்தில் பாதிரியாராக தேவஇரக்கம் (54 வயது) பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், தேவாலயத்திற்கு வந்த சிறுமி ஒருவருக்கு பாதிரியார் தேவஇரக்கம் பாலியல் தொந்தரவு அளித்ததாக சொல்லப்படுகிறது.

பாதிரியார் இடமிருந்து தப்பி ஓடி வந்த அந்த சிறுமி, அங்கு நடந்த சம்பவத்தை அந்த பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

ஆனால் போலீசார் கிறிஸ்துவ பாதிரியார் தேவஇரக்கம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தனர்.

இந்த மனு காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கிறிஸ்துவ பாதிரியார் தேவஇரக்கம் மீது காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்று அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanjipuram Christian priest arrested


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->