தமிழகம் | அந்த சாதி பெண்ணா? காதல் விவகாரத்தில் பெற்ற மகனை கொளுத்திய தாய்.!
kovai love issue mother attack own son
கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தின சபாபதிபுரம் பகுதியை அடுத்த சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் இவரது மகன் குமாரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் குமாரின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் தாய் ராணி அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இதனால் குமாருக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குமார், தனது காதலியுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ராணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மகன் மீது ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.
அப்போது குமார் குடிபோதையில் இருந்ததால் தீயை அணைத்து விட்டு வீட்டில் படுத்து தூங்கி உள்ளார். மறுநாள் காலையில் எழுந்தவுடன் போதை தெளிந்ததும் குமாருக்கு தீக்காயத்தின் வலி தெரிந்தது. இதன் பின்னர், அவரை அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக ரத்தின சபாபதிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குமாரின் தாயார் ராணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
kovai love issue mother attack own son