கோவை | பள்ளி மாணவியை கடத்தி தாலிகட்டிய நாடக காதலன்.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு செங்குட்டு பாளையத்தை சேர்ந்த சரவணன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. 

இதனை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கண்டித்துள்ளனர். 

இதனால் சரவணன் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கடத்தி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் சரவணன் மாணவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். 

அப்போது, சரவணனின் பெற்றோர் மாணவியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சரவணன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சரவணனை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai pollachi drama lover kidnap case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->