சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ மோதிய விபத்து.. 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி டெம்போ மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

சேலம் தம்மம்பட்டி சேர்ந்த செல்வகுமார், கற்பகவல்லி, மிதுன், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 7 பேர் சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு மினி டெம்போவில் டைல்ஸ் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி டெம்போவில் முன் பகுதியில் அமர்ந்து வந்த செல்வகுமார் கற்பகவள்ளி மிதுன் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதேபோல் லாரியின் பின் பக்கம் அமர்ந்திருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry and mini Dumbo accident in Chidambaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->