இளைஞரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


இளைஞரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.! போலீசார் விசாரணை.!

சென்னையில் உள்ள கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கி சரண். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் இதே நிறுவனத்தில் பணிபுரியும் வந்தனா என்ற பெண்ணுடன் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்று கொண்டிருந்தபோது மாஞ்சா நூல் பட்டம் ஒன்று பறந்து வந்து நிக்கி சரண் கழுத்தில் மாட்டியது. இதனால் அவர் கழுத்து அறுந்த நிலையில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துள்ளார். 

இதைப்பார்த்த வந்தனா நண்பரை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்தபோது அவரது கை விரல்களிலும் காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

maanja thread slit younth neack in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->