மாவட்டத்தின் நான்கு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்! மாவட்ட ஆட்சியர்களின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மார்க் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, பூவந்தி, திருப்பாச்சேத்தி, மதகுபட்டி ஆகிய பகுதிகளில், மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள், டாஸ்மாக் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதே போல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் வருகின்ற 27 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai sivagangai TASMAC shops closed


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->