தீபாவளி சம்பவம்: சமாதானம் - சதக், சதக்! மதுரையை பதற வைத்த கொலை!
Madurai Thirupurankundram rajendra pirasath murder
முன்விரோதப் பகையை முடித்துக்கொள்ள, சமாதானம் செய்ய சென்றபோது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். திருப்பரங்குன்றம் மேலப்பட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் சண்முகராஜ்.
இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் 3 பேரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டைகள் முடிந்துள்ளது.
இதனால் இந்த மூன்று பேருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டு, மனக்கசப்பில் இருந்து வந்துள்ளனர். மேலும் தாங்கள் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் கூட, மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் பேச்சு கொடுக்காமல், முகத்தை கூட பார்க்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச வந்த ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜேந்திர பிரசாத், கார்த்திகை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக், ராஜேந்திர பிரசாத் மீது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பதில் தாக்குதல் நடத்தியதில், ராஜேந்திர பிரசாத் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, ராஜேந்திர பிரசாத்தை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கார்த்திக் மற்றும் சண்முகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Madurai Thirupurankundram rajendra pirasath murder