மதுரையில் சினிமா சூட்டிங் என்று கூறி விபச்சாரம் - போலீசிடம் இருந்து தப்பிக்கும் போது நேர்ந்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் சினிமா சூட்டிங் என்று கூறி விபச்சாரம் - போலீசிடம் இருந்து தப்பிக்கும் போது நேர்ந்த கொடூரம்.! 

மதுரை மாவட்டத்தில் உள்ள மகபூப்பாளையம் டி.பி சாலையில் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சினிமா ஷூட்டிங்கிற்காக பெண்களை அழைத்து வந்ததாக கூறி சென்னையை சேர்ந்த பாண்டியன் என்பவர் விடுதியில் இருந்த மொத்த அறைகளையும் வாடகைக்கு எடுத்துள்ளார். 

அந்த பெண்கள் சுமார் 25 நாட்களுக்கும் மேலாக அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த விடுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சோதனை செய்தனர். 

பின்னர் போலீஸார் அங்கிருந்த பெண்களை மமீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முக்கிய குற்றவாளியான பாண்டியனை தேடிவந்தனர். இதையடுத்து பாண்டியன் விடுதியின் முன்பு இருந்த கிருதுமால் கால்வாயில் மயங்கிய நிலையில் கிடந்தாது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்துச் செல்வதற்காக கால்வாயில் குதித்த போது தவறி விழுந்து மயங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died after escape from police in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->