நெல்லை || பேனரால் வந்த வினை - மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.!
man died for electric shock attack in tirunelveli
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் ராஜபதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து. விளம்பர பேனர்கள் அமைக்கும் தொழிலாளியான இவர் நேற்று மதியம் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகில் சாலையோரம் விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அவருடன் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்முருகன் என்பவரும் வேலை செய்தார். இந்த நிலையில், இருவரும் அங்கு மின்மாற்றி அருகில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனரை வேறு இடத்தில் மாற்றி வைக்க தூக்கினர்.
அப்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக மின்மாற்றியில் உரசியதனால் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவரையும் பரிசோதனை செய்ததில் பேச்சிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சதீஷ் முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man died for electric shock attack in tirunelveli