தாயின் காதலனால் 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 33 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இவரது கருத்து வேறுபாடு காரணமாக தனியே வசித்து வந்த அவருக்கு மகேஷ் குமார் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், அந்த பெண்மணி வேலைக்கு சென்றுவிடவே மகேஷ் குமார் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த சிறுமிக்கு ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய்க்கு தெரிவித்துள்ளார். அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து,  மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மகேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man sexually abused his lovers daughter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->