மன்னார்குடி பட்டாசு ஆலை வெடி விபத்து! நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மன்னார்குடி பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 1:45 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சதீஷ்குமார் (வயது 34) என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mannargudi firecracker factory explosion CM announced relief


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->