அ.தி.மு.க. பற்ற வைத்த தீதான் மின் கட்டண உயர்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க தான் காரணம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல அ.தி.மு.கவின் செயல்பாடு உள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான். 

உதய் மின் திட்டத்தில் இணைந்து, அ.தி.மு.க. பற்ற வைத்த தீதான் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு காரணம். மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது வேடிக்கையான ஒன்று.

கடந்த 2011-12 தி.மு.க. ஆட்சியில் 18,954 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு விட்டு சென்றோம். ரூ.1 லட்சத்து 59 கோடிக்கு மேல் கடன் மட்டுமே உள்ளது. இதற்கு வட்டியும் கட்டி வருகிறோம். நிதி சுமையை சரிகட்டுவதற்கு தான் கட்டண உயர்வு செய்துள்ளோம். 

அ.தி.மு.க. ஆட்சியில் பலமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister thangam thennarasu speech about admk


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->