மனைவியை பார்க்க சென்ற புதுமாப்பிள்ளை.! மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பரப்பற்று எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் கொத்தனார் செல்வன் (36). இவருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மரிய ரேகா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் தாய் வீட்டிற்கு சென்ற மரியாவை அழைத்து செல்வதற்காக செல்வன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆரல்வாய்மொழி நான்கு வழி சாலை அருகே சென்றபோது செல்வன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த செல்வனை அவ்வழியாக சென்றவர்கள் வீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிகிச்சை பலனின்றி செல்வன் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle accident in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->