கல்லூரிக்கு பணம் கட்டமுடியாத விரக்தி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!  - Seithipunal
Seithipunal


பூதப்பாண்டி அருகே ஞானம் என்ற ஊருக்கு அருகே அந்தரபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் தேவதாஸ். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மகள் சுபிதா கிரேஸ் (21 வயது) என்பவர் திடல் பகுதியில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

இவரது அண்ணன் சுஜின் ராஜ் (வயது 26) ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மாணவி சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் அவர்களது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவர் கல்லூரி கட்டணம் கட்டவில்லை என்ற காரணத்தால் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இத்தகைய நிலையில், அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அக்கம் பக்கத்தினர் கவனித்து, தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அதன்பின் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். 

கல்லூரி கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? என்று விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagarkoil college girl suicide for college fees


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->