திமுக எம்பி கைது செய்யப்படுகிறாரா? ஸ்டாலின் சொன்ன வார்த்தை! கிடுக்குபுடி போடும் டிவிட்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "ஜாதி, மத ரீதியிலான நச்சுக் கருத்துக்களை பரப்புவோரை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

"வட மாநிலத்தில் விநாயகருக்கு பின் சிவன்-பார்வதி குடும்பக் கட்டுப்பாடு செய்தார்களா?" என்று தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள் ஹிந்துக்களின் மனம் புண்படும்படி பேசியிருப்பது  வன்மையாக கண்டிக்கத்தது, தண்டிக்கத்தக்கது.  

முதலமைச்சரின் உத்தரவை ஏற்று ஹிந்து மதம் குறித்த நச்சு கருத்தை பேசிய செந்தில் குமார் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? 

முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன்" என்று, நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narayanan Thirupathy Condemn to DMK MP Hindu god hate Speech issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->