குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்த கார் - வாலிபர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள குன்றத்தூரை அடுத்த நல்லூர் புதுப்பேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் தாம்பரம் அடுத்துள்ள பெருங்களத்தூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

அதன் பின்னர் நேற்று மாலை மீண்டும் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு வந்துகொண்டிருக்கும் போது குன்றத்தூர் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து,  சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளை உடைத்து எறிந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. 

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் காருக்குள் லேசான காயங்களுடன் சிக்கி தவித்த சங்கரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்துவந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கால்வாய்க்குள் பாய்ந்து கிடந்த காரை மீட்டனர்.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  சங்கர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருந்துள்ளார். அந்த தூக்க கலக்கத்திலேயே காரை ஓட்டிவந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai car accident young man injury


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->