கணவரால் கஞ்சா வழக்கில் சிக்கிய மனைவிக்கு சிறை காவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகருன்னிஷா. பட்டதாரியான இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் மூலம் அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இருப்பினும் ஜெகருன்னிஷாவிற்கு அந்த வாழ்க்கை தோல்வியிலேயே அமைந்தது.

இதைத்தொடர்ந்து ஜெகருன்னிஷா இரண்டாவதாக முகமது ரபி என்ற மிட்டாய் ரபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ரபி ஒரு ரவுடி ஆவார். அதுமட்டுமல்லாமல், இவர் மூன்று கொலை முயற்சி வழக்குகள், இரண்டு கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் பன்னிரண்டு வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மிட்டாய் ரபியையும், ஜெகருன்னிஷாவையும்,  தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 

அதில், மிட்டாய் ரபி தப்பி ஓடிய நிலையில், ஜெகருன்னிஷா மட்டும் 1.2 கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கி கொண்டார். முதலில் ஜெகருன்னிஷா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

அதன் பின்னர், போலீசார் தப்பி ஓடிய மிட்டாய் ரபியையும் கையும் களவுமாக பிடித்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai woman arrested for drugs sale


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->