கிருஷ்ணகிரி : ஊருக்குள் நுழைந்த சிறுத்தை புலி - கன்றுக்குட்டி பலி.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி அருகே பூத்தனஅள்ளி கிராம பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை புலி ஒன்று சுற்றித்திரிகிறது. இங்குள்ள ஒரு வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலி செல்லும் காட்சிகள் பதிவாகிவுள்ளது. 

இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடக மாநில வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

இந்த தகவலின் படி, வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலியின் கால் தடங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதிக்கு மிக அருகிலேயே இருப்பதால் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று கிராமத்திற்கு வந்த சிறுத்தை ராஜேஸ் என்ற விவசாயி வளர்த்து வந்த கன்றுக்குட்டியை கடித்து கொன்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near krishnagiri cheatah leapord kill Calf died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->