குன்றத்தூர் : இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் படுகாயம்.!
near kundrathur two cars accident student injury
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனாபிரபு. இவர், வளசரவாக்கத்திற்கு அடுத்துள்ள ராமாபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இவர், தன் நண்பர்களான சையது, லுகேஸ்வரன், மனிஷ் ஆகியோருடன் சேர்ந்து பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் நோக்கி காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
இவர் குன்றத்தூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச்செல்வதற்கு முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார், சாலையோரத்தில் இருந்த பள்ளத்துக்குள் பாய்ந்ததில் தூள் தூளாக நொறுங்கியது. காரில் வந்த சையது என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், காயம் அடைந்த மாணவனை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணம் செய்து வந்த மற்ற யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் மேலும் இரண்டு கார்கள் சேதம் அடைந்தது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
near kundrathur two cars accident student injury