தென்காசி : சங்கரன்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளை - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. தொழிலதிபரான இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளனர். 

அப்போது அவரது வீட்டின் அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்து இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரகுபதி வீட்டில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயுள்ளதா என்று பார்த்துள்ளார். 

அதன் பின்னர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் ரகுபதியின் வீட்டில் பணிபுரிந்த மகேஸ்வரி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், அந்த பெண் முன்னுக்குப் பின்னாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார், மகேஸ்வரியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் துளசி உள்ளிட்டோரை கைது செய்தனர். தொழிலதிபர் வீட்டில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near sangaran kovil robbery in businessman house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->