#BREAKING : திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தல்.. தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் செம்மரக்கட்டையை கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எர்ரவாரி பாளையம் பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தல் காரர்களை கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சங்கர் என்பவர் கடப்பா மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.71 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Near Thirupathi semmarakattai smuggling 10 tamilans arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->