திமுக நகரமன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த திமுக கவுன்சிலர்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகரமன்ற திமுக தலைவர் சிவகாமி, துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தலைவர் சிவகாமி, துணை தலைவர் நாகராஜ் மீது, திமுகவை சேர்ந்த ஆலன் என்ற நகர்மன்ற உறுப்பினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். 

நகரமன்ற உறுப்பினர் ஆலன் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

திமுகவை சேர்ந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆலன் புகார் அளித்துள்ளார்.

 

திருச்சியில் நிதி நிறுவனம் வந்து வெட்டி கொடுமை செய்வதாக கூறி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜோதி என்பவர் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்திய பிறகும், நிதி நிறுவனம் அபராத வட்டியாக 19000 கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் ஜோதியின் ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்த அந்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nelliyaalam DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->