நீதித்துறைக்கு சவால் விடும் நித்தியானந்தா - கொந்தளிக்கும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு! - Seithipunal
Seithipunal


நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

நித்தியானந்தாவின் சீடராக இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த சுரேகா தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர், ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக என் மீது தேனி மாவட்டம் சேத்தூர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யான புகார். எனவே, இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "நித்தியானந்தா குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா வின் சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா?

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார். நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள், பிடிவாரண்டுகள் உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்திற்கு வருவதில்லை.

ஆனால் அவரது சொத்துகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, மனுதாரர் இனிமேல் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் அவருக்கு முன்ஜாமின் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithyananda high court tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->