சென்னை ஐஐடியில் வடமாநில மாணவர் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னை ஐஐடியில் வடமாநில மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷோக்குலே கேதார் சுரேஷ் என்பவர் சென்னை ஐஐடி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவர் கேதார் சுரேஷ் இன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மாணவர் கேதார் சுரேஷ் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கேதார் சுரேஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததும், தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவரை அவர் காதலித்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு மாணவர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

north state student sucide in chennai iit


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->