தமிழகம் | மகளை கேலி, கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை மீது கொடூர தாக்குதல்.!
pachapatti mani arrested
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் கௌசல்யா. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் இவரது மகன் மணி.
பச்சம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. அப்போது ராமனின் மகள் கவுசல்யாவை, ஜெகனின் மகன் மணி கிண்டல் செய்துள்ளார். இது பற்றி கௌசல்யா தனது அப்பாவிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவர் மணியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி மற்றும் அவரது தந்தை ஜெகன் ராமனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில், ராமன் படுகாயமடைந்தார். இந்த நிலையில் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ராமனின் குடும்பத்தினர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணி மற்றும் அவரது தந்தை ஜெகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.