#தமிழகம் || ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி., புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் வீரமங்களத்தைச் சேர்ந்த உஷா என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில், ஆடி மாதம் பிறந்துள்ளதால், உஷாவின் பெற்றோர்கள் அவரை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து சுரேஷ் தனது மனைவியை பார்க்க அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் குடும்பத் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுரேஷ், அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சுரேஷின் உறவினர்கள் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி  உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் சமாதானத்திற்கு பிறகு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perumalpatti suresh suicide case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->