நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் சென்னை இளைஞர்! பிரதமர் மோடி பாராட்டு.! - Seithipunal
Seithipunal


நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி வரும் சென்னையை சேர்ந்த இளைஞர் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களிடம் பேசுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சென்னையை சேர்ந்த இளைஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளை தூய்மைபடுத்துவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து 150 க்கும் அதிகமான ஏரி குளங்களை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM congratulated A run krishnamurthy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->