தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்.. ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் தற்கொலையா? காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.  தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த அவர் கடந்த 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்காகன காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணுக்கும் திருமணமான வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அந்த நபர் தனது நண்பர்களுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police Investigation about Suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->