செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி மறைவு - அமைச்சர் இரங்கல்!
Private news Channel News Reader Soundarya Amuthamozhi death
ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சி, செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஆறு மாத காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழிக்கு, அந்த செய்தி நிறுவனத்தின் சார்பாகவும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டதது.
மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தரப்பிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுத மொழியின் மறைவுக்கு பல்வேறு பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த செல்வி. சௌந்தர்யா (வயது 30) அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26.07.2024) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் குடும்பத்தினருக்கும், ஊடகம் கொண்டு, அவரின் பிரிவால் வாடும்
மற்றும் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Private news Channel News Reader Soundarya Amuthamozhi death