அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு அளிக்க புழல் சிறைத்துறை போலீசார் மருத்துவமனை விரைவு!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு அளிக்க புழல் சிறைத்துறை போலீசார் மருத்துவமனை விரைவு!!

நேற்று தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துரையின் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அதிகாரிகள் முயன்றனர்.

அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து வலியால் கதறி அழுதுள்ளார். இதைப்பார்த்த அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனே அவரை மீட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் முக்கியமான ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

அந்த அறிக்கையில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக  இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புழல் சிறை அதிகாரிகள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து துணை ராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puzhal jail police guard of minister senthil balaji


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->