இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்திலிருந்து கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வங்க கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீன்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் மீன் பிடிக்க சென்றனர். 

இந்நிலையில் கச்சதீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சர்வதேச எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்து இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் 2 விசை படகுகளில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி உள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு விசைப்படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rameswaram fishermen chased away by SriLankan Navy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->