#Breaking : பனங்காட்டு படைக்கட்சி ராக்கெட் ராஜா கைது.! கொலை வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


பனங்காட்டு படை கட்சியின் நிறுவனரான ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவாகியது.

இத்தகைய நிலையில், பனங்காட்டு படை கட்சியின் பிரமுகர் ஹரி நாடார் சமீபத்தில் கைதானார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது நாங்குநேரி கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைதாகியுள்ளார். 

இவர்கள் இருவருக்கும் சமீபத்திய தேர்தல் நடைபெற்றதில் மூன்று முதல் நான்கு சதவீத வாக்குகள் அப்பகுதியில் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rocket Raja arrested In nanguneri Murder Case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->