சேலம்; காதல் மனைவி தற்கொலை! குற்ற உணர்ச்சி - மரணம் வரை சென்று மீண்டும் தற்கொலை செய்த மருத்துவர்! - Seithipunal
Seithipunal


சேலம் அம்மாபேட்டையில், மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் மன வேதனையில் (மருத்துவர்) கணவன் குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 

சேலத்தில் உள்ள வாய்க்கால் பட்டறை, வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் இனியவன். மருத்துவரான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி என்ற ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவர், அம்மாபேட்டையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வங்கியில் பணியாற்றிய செங்கோட்டுவேல் என்பவரது மகள் சவுமியாவுக்கும், இனியவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்துள்ளனர். 

இதற்கிடையே, இனியவன் தனது மருத்துவ பயிற்சிக்காக 6 மாதங்களுக்கு வெளியூருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அதுவரை தனது மனைவியை சேலத்தில் உள்ள அவரது தாயாரின் வீட்டிற்கு சென்று தங்கி இருக்குமாறு தெரிவித்துள்ளார். 

இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 7-ம் தேதி சவுமியா வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காதல் மனைவியின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் எண்ணிய இனியவன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தியுள்ளார். இதனை அறிந்த அவரது வீட்டினர் உடனடியாக அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்தனர். இதனை அடுத்து, அவர் நெல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், பூரண குணமடைந்த அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். 

இந்த நிலையில், இன்று காலை அவர் மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Doctor suicide case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->