சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து - விரைவில் வெளியே வருகிறார்!  - Seithipunal
Seithipunal


சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வழக்குகளில் சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றிருந்தாலும் குண்டாஸை ரத்து செய்ய அதை ஒரு முகாந்திரமாக எடுத்துக்கொள்ள கூடாது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 16+ வழக்குகளை ரத்து மற்றும் 2 வது குண்டாஸை ரத்து செய்ய கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சவுக்கு சங்கர் எப்போது வேண்டுமானாலும் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku Shankar Case TNGovt SC Case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->