நீரில் மூழ்கிய மாணவன் - காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.!
school student and head master died in krishnagiri for drowned water
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் அடுத்த எழுவப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த நிதின் என்ற மாணவர் மதிய உணவு இடைவெளியின் போது பள்ளியின் பின்புறம் விவசாய பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து மற்ற மாணவர்கள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதைக் கேட்டு சம்பவ இடத்திற்கு ஆசிரியர்கள் வந்தனர். அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜா என்பவர் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவனை மீட்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரும் வெளியே வராத நிலையில் சக ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவன், பள்ளி தலைமையாசிரியர் இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர்.
சடலத்தை நீரில் இருந்து மீட்ட பாகலூர் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். நீரில் மூழ்கிய மாணவனை காப்பாற்ற சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்திய ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student and head master died in krishnagiri for drowned water