முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞர்.. காதலன் வெறிசெயல்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


முன்னாள் காதலியுடன் பேசியவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.  இந்நிலையில், அவர் காதலித்து வந்த பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த இந்து வாலிபர் பேசி பழகி வந்துள்ளார்.

இது பாலுவுக்கு பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அரசு அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது அங்கு வழிபாடு நடத்த வந்த பெண்ணுடன் ரசூல் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது இதனை கண்டு ஆத்திரமடைந்த அவரது நண்பர்களுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

 இதில் பலத்த காயமடைந்த அவரை உடன் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  மேலும், தப்பியோடிய பாலுவை தேடி வருகின்றனர் முன்னாள் காதலியுடன் வாலிபர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Screaming at the young man who talked to his ex-girlfriend


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->