ரயிலில் அலறியடித்த பெற்றோர்!...படுகாயத்துடன் 4 வயது குழந்தை!...வாஞ்சி மணியாச்சி ரயிலில் நடந்தது என்ன?
Screaming parents in the train 4 year old child with severe injuries what happened in vanchi maniachi train
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு வாஞ்சி மணியாச்சி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில், கோவையைச் சேர்ந்த தம்பதியினர் தனது 4 வயது மகனுடன் பயணம் செய்துள்ளனர்.
வழக்கம் போல் இந்த ரெயில் சென்று கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து கடம்பூர் ரெயில் நிலையத்தை கடந்த போது, நடுப்படுக்கை சிறுவன் மீது விழுந்ததில் சிறுவனுக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அலறியடித்தனர்.
இது குறித்து ரயிலில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அதே ரெயிலில் பயணம் செய்த ஒரு மருத்துவரின் உதவியுடன் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் ரெயில் மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்த போது, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த சிறுவன் பயணம் செய்த இருக்கை பகுதியில் நடு இருக்கை சரியாக பொருத்தவில்லை என்றும், இதன் காரணமாக சிறுவன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், இருக்கையில் எந்த கோளாறும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
English Summary
Screaming parents in the train 4 year old child with severe injuries what happened in vanchi maniachi train