#BREAKING || தமிழ்நாடு தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் ஐ.பி.எஸ் நியமனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி ஜிபியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் தகவல் ஆணையரின் பதவிக்கு பல மாதங்களாக யாரும் நியமிக்கப்படாத நிலையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 17ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஷகீல் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாடு தகவல் தலைமை ஆணையர் பதவியில் நீடிப்பார் என தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் கடந்த 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது ஐபிஎஸ் பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shakeel Akhtar appointed as Tamil Nadu Information Commissioner


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->