காவல் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு, வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காவல் உதவி ஆய்வாளர் பணி எழுத்துத் தேர்வுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தமிழக காலவல்துறையில் காலியாக உள்ள காவலர், உதவி ஆய்வாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்தும்.

தற்பொழுது தமிழகத்தில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 7- ஆம் தேதி வரை இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்னப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம், வயது வரம்பு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களையும் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தகுதித் தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படும் என்றும், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SI exam applications


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->