பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்களை, மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்பட்டது.

இதில், 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், மனோவின் மகன் மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் (28), தர்மா (26) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதற்கிடையே இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஒரு காணொளி வெளியானது. மனோவின் மகன்களை குற்றம் சாட்டிய எதிர்தரப்பினர் தாக்கியது அம்பலமானது. 

இதுகுறித்த விசாரணையில், பாடகர் மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக் ஆகியோரை 4 மோட்டார்சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கியது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாடகர் மனோவின் மகன்கள் ஜாகீர், ரபீக்-கிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singer Mano sons Bail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->