தந்தையின் கழுத்தை அறுத்த மகன்.! தஞ்சாவூர் அருகே பரபரப்பு.!
Son arrested for slitting father neck in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையில் மகன் தந்தையின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (60). இவரது மகன் கங்காதரன் (23). இந்நிலையில் இவர்கள் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மகன் கங்காதரன் தந்தை பெருமாளின் கருத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையின் கழுத்தை அறுத்த மகன் கங்காதரனை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Son arrested for slitting father neck in Thanjavur