பெண் பக்தையை மணமுடித்த சூரியனார் கோவில் ஆதீனம்..!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே பிரசித்திப்பெற்ற சூரியனார் கோவில் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமி இருந்து வருகிறார். 54 வயதான இவரை ஏராளமான பக்தர்கள் பின்தொடர்வதுடன் அடிக்கடி ஆதீனத்துக்கு வந்து மகாலிங்க சுவாமியிடம் ஆசி பெற்றும் செல்கின்றனர்.
-
அந்த வகையில் அடிக்கடி ஆசி பெற்று வந்த ஹேமாஸ்ரீ என்ற பெண் பக்தையை சூரியனார் கோவில் ஆதீன மடாபதிபதி மகாலிங்க சுவாமி திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் பதிவு திருமணம் அக்டோபர் மாதம் 10ம் தேதி நடந்துள்ளது.

திருமணம் முடிந்தும் இத்தனை நாள்களாக இருவரும் ரகசியம் காத்து வந்துள்ள நிலையில் தற்போது இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியானது. இந்த திருமணம் குறித்து மடாதிபதி மகாலிங்க சுவாமி சமூக வலைதள பதிவில் கூறியதாவது:- 

‛ஆதீன மடாதிபதியாக திருமணம் ஆனவர்களும் இருந்துள்ளனர். நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்துள்ள ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர். இனியும் அவர் பக்தையாக தொடர்வார்'' என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பெண் பக்தரை அவர் திருமணம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sooriyanar kovil adheenam married woman devotee


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->