#சென்னை || 30 அடி சுவற்றில் தொங்கிய இளைஞரின் உடல்.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே குடியிருப்பின் பக்கவாட்டுச் சுவரில், தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் உடல் ஒன்று இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் தெரசாபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென நேற்று அதிகாலை அவரின் அந்த குடியிருப்பின் சுவரின் பக்கவாட்டில், 30 அடி உயரத்தில் முனியப்பன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முனியப்பன் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு, பின்னர் தூக்கில் தொங்க விடப்பட்டரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri perampathur therasapuram young man suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->