அதிர்ச்சி... கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தொழிலுக்காக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால், கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பன்னிரண்டு பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilangan navy arrest 12 tamilnadu fishermans


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->